டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களை நினைவு கூறும் வகையில், அண்ணா பல்கலைகழக மண்டல வளாகத்தில் சிறுதுளி அமைப்புடன் இணைந்து "கலாம் வனம்" திட்டம் முதல் கட்டமாக 27.07.2016 அன்று 5,000 மரக்கன்றுகள் நட்டுத் துவக்கி வைக்கப்பட்டது. இதன் இரண்டாம் கட்டமாக 16.10.2016 அன்று 4,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. மூன்றாம் கட்டமாக 11.01.2017 அன்று 2,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. நான்காம் கட்டமாக 15.03.2017 அன்று 3,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், சுமார் 500 பழங்கள் மற்றும் அரிதான தாவரங்கள் நடப்பட்டன. 7.5 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவு நீர் சேகரிப்பு குளம் நிறுவப்பட்டது.

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் இரண்டாவது நினைவு தினத்தையொட்டி, மேலும் 7,000 மரக்கன்றுகள் 27.07.2017 வியாழக்கிழமை இன்று காலை 9:00 மணியளவில் நடப்பட்டது. இதில் ரூட்ஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குனர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கோவை மெட்ரோபாலிஸ் ரோட்டரி சங்க தலைவர் ஆர்.ஷா, அண்ணா பல்கலைக் கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், மூத்த பத்திரிக்கையாளர் சுசீ திருஞானம், ரேடியோ சிட்டி பிரபு, கோவை மண்டல வளாக முதன்மையர் சரவணக்குமார், பசுமை வளாக ஒருங்கிணைப்பாளர் சிவகுமாரன், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் யுவராஜ், பேராசிரியர்கள், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் இரண்டாவது நினைவு தினத்தையொட்டி, மேலும் 7,000 மரக்கன்றுகள் 27.07.2017 வியாழக்கிழமை இன்று காலை 9:00 மணியளவில் நடப்பட்டது. இதில் ரூட்ஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குனர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கோவை மெட்ரோபாலிஸ் ரோட்டரி சங்க தலைவர் ஆர்.ஷா, அண்ணா பல்கலைக் கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், மூத்த பத்திரிக்கையாளர் சுசீ திருஞானம், ரேடியோ சிட்டி பிரபு, கோவை மண்டல வளாக முதன்மையர் சரவணக்குமார், பசுமை வளாக ஒருங்கிணைப்பாளர் சிவகுமாரன், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் யுவராஜ், பேராசிரியர்கள், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.